இடையூறு விளைவித்தால் வாக்குகள் இரத்து : தேர்தல் ஆணையாளர்

Plastic-Ballot-Box[1]கொழும்பு: வாக்குச்சாவடிகளில் எவராவது இடையூறு விளைவித்தால் வாக்குகள் இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள தேர்தலில் இலங்கையில் முதல் முறையாக பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

mahinda-deshapriya1

Published by

Leave a comment