கண்டி: கண்டி மஹியாவ பிரதேசத்தில் உள்ள அஸாத் சாலியின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹியாவ பகுதியில் உள்ள அஸாத் சாலியின் ஆதரவாளர் மொஹமட் ஹக்கின் வீட்டில் அமைந்திருந்த தேர்தல் அலுவலகம் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment