முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைத்தீர்வுக்கு அரசாங்கத்துக்கு வழங்கும் இறுதிச்சந்தர்ப்பமே இது- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

hizbullah– முகம்மட் சஜி

மன்னார்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக அகில இலங்கை மக்கள் காங்ரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நேற்று மன்னார் முதலைப்பாளியில் முசலிப் பிரதேசசபையின் தவிசாளர் தேசமானிய யஹியா தலைமையில் இடம்பெற்றது.

அங்கு கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கத்தை எதிர்த்து, அரசாங்கத்தை தோற்கடித்து, அரசாங்கத்தை முறியடித்து எந்தவொறு செயற்பாட்டையும் செயற்படுத்த முடியாது. ஆகவே அரசாங்கத்துக்கு இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கி அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டு அரசாங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும்’ என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொன்டார்.

வீடியோவைக் காண இங்கு ‘கிளிக்’ செய்யவும்:

http://www.youtube.com/watch?v=mXU65GUCSpQ

Published by

Leave a comment