கொழும்பு: இலங்கையில் பிரிவினையை இந்தியா உருவாக்காது என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் அனுமதிக்கமாட்டோம் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு மகிந்த ராஜபக்ச அளித்த பேட்டியில், வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது.
பிரிவினைவாத நோக்கத்தை கொண்டதாகவே கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை உள்ளது. அந்த பிரிவினைவாதத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த பிரிவினைவாத கொள்கைக்கு எந்த நாடும் ஆதரவு கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை.
இலங்கை பிளவுபடுவதை குறிப்பாக இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது. இந்தியாவின் நலனுக்கு எதிராக இலங்கையில் எந்த ஒரு செயல்பாட்டையும் அனுமதிக்க மாட்டோம். இலங்கை மண்ணில் அதற்கு இடம் கிடையாது.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பிரச்சனை வேறு. ஆனால் எங்களுக்கு இரு நாடுகளுமே நட்பு நாடுகள் என்று கூறியுள்ளார்.
Leave a comment