-டீன் பைரூஸ்-
காத்தான்குடி;இம்முறை புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டியுள்ள ஹாஜிமார்களின் நலன் கருதி வழமை போன்று “பொது ஹஜ் பயான் ” இம்முறையும் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையின் ஏற்பாட்டினில் சென்ற 06.09.2013 தொடக்கம் நடைபெற்று வருகின்றன.
பெண்களுக்கான பயான் சென்ற மூன்று நாட்களாக இடம் பெற்றன.
ஆண்களுக்கான பயான் 07.09.2013 தொடக்கம் மஹ்ரிப் தொழுகையின் பின் காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடை பெற்று வருவதுடன் மேற்படி பயான் தொடர்ந்து 05 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மேற்படி பயான் நிகழ்வில் சகல ஹாஜிமார்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டப்படுகின்றனர்.
Leave a comment