த.தே.கூட்டமைப்பு முஸ்லிம் வேட்பாளர் அய்யூப் அஸ்மினின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மன்னார் அடம்பன், சுவர்ணபுரி கிராமத்தில் மும்முரம்

1[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

மன்னார்: வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 21 திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பு வேட்பாளர் அய்யூப் அஸ்மினின் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இன்று மன்னார் மாவட்டத்திலுள்ள அடம்பன்,சுவர்ணபுரி கிராமத்தில் தமது  தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

இதன்போது அங்கிருக்கும் சிவில் சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியதுடன் அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் வாழ்க்கை நிலைகுறித்து கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அப்பகுதி மக்கள் இந்த த.தே.கூட்டமைப்புடனான இந்த முஸ்லிம் கூட்டமைப்பை வரவேற்பதாகத் தெரிவித்ததுடன் தமது ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நானாட்டான் உட்பட பல பகுதிகளிலும் பிரச்சார நடவடிக்கைகளில் வேட்பாளர் அய்யூப் அஸ்மின் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment