டமஸ்கஸ்: சிரியா அருகே மத்திய தரைக் கடல் பகுதியில் நேற்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வந்து விழுந்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ஏவுகணை பயிற்சியின்போது இவை ஏவப்பட்டுள்ளன. ஆனால், இது குறித்து இந்த இரு நாடுகளும் எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்தன. ஆனால், இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதை ரஷ்யா கண்டுபிடித்து வெளியுலகுக்கு சொன்னதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த ஏவுகணை பயிற்சி நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுவிட்டது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.
ஆனால், சிரியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு தந்து வருகிறது. சிரிய அதிபர் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக நிற்கிறது ரஷ்யா. இதனால், ஐ.நா. சபையில் சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ரஷ்யா தனது வீடோ அதிகாரம் மூலம் முறியடிக்கும் நிலை உள்ளது.இதைத் தவிர்க்க ஐ.நா. சபையிடம் கேட்காமலேயே நேரடியாக சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.
மேலும் இது குறித்து அதிபர் விளாடிமீர் புடினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு விவாதித்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. கடந்த வாரம் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை சிரியாவுக்கு நெருக்கமாக அனுப்பியது. இதை கடுமையாக கண்டித்த ரஷ்யா, போட்டிக்கு தனது உளவு பார்க்கும் போர்க் கப்பல்களை சிரியாவுக்கு உதவியாக அனுப்பி வைத்தது.
அதே போல அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இஸ்ரேல் கூறியது. அமெரிக்காவும் ஆழ்ந்த அமைதி காத்தது.
இந் நிலையில் நீண்ட நேரத்துக்குப் பின் அமெரிக்காவுடன் இணைந்து ஏவுகணை சோதனை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. இதன்மூலம் இந்த இரு நாடுகளின் ஏவுகணைகள் தான் சிரியாவை நோக்கி வந்தன என்பது உறுதியாகியுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேலின் இந்தச் செயல், அந்தப் பிராந்தியத்தில் ஒரு போருக்குக் காரணமாகிவிடும் என்று சிரியா எச்சரித்துள்ளது. சிரியா இராணுவம் பின்வாங்கப்போவதில்லை எனவும், எத்தகைய தாக்குதல்களையும் முன்நின்று சந்திக்கத்தயார் எனவும் சிரியா அதிபர் கூறியிருக்கிறார்.
சிரியாவுக்குள் அமெரிக்கா காலடி வைப்பதற்கு முயற்சிக்கும் தருணத்தில் சிரியாவுக்கு, ரஷ்யாவின் ஆதரவும், ஈரானின் ஆதரவும் பக்க பலமாக அமையும்.
மத்திய கிழக்கில் அமெரிக்க அடிமையாக அல்லாமல், நெஞ்சுயர்த்தி நிற்கும் ஒரே நாடு ஈரான். எனினும் ஷியாக்கள் என்ற வேறுபாட்டால் அரபிகள் ஈரானைக் கவிழ்த்துவிட வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
சிரியாவைச் சுற்றி அமெரிக்காவும், ரஷ்யாவும், ஈரானும், சவூதி அரேபியாவும் நிற்கின்றன. இதில் விளைவு எவ்வாறு அமையப்போகும் என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிய வரும் என டமஸ்கஸ் அறிவித்துள்ளது.
![-The-Syrian-civil-war[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/the-syrian-civil-war1.jpg?w=150&h=84)
![-The-Syrian-civil-war[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/the-syrian-civil-war1.jpg?w=630&h=354)
Leave a comment