ஆடுகள் ஒருபோதும்
குரைப்பதில்லை நாய்களைப் போல …
அதனால்தான்
இன்றும் சில ஓநாய்களால்
ஊளையிட்டுக்கொண்டே இருக்கமுடிகிறது
வல்லரசு எனும் வல்லூருகலாய் !
புத்தனையும் காந்தியையும்
நக்கி பார்க்காவிட்டால்
அவைகளுக்கு தூக்கம் வருவதேயில்லை .
இடையன்களை எல்லாம் புடையன்கள் போல
கொத்தி கொத்தி கொல்லுவதில் தான்
இவைகளுக்கு பேரானந்தம் .
ஏன் என்றால்
அப்போதுதானே
ஆடுகளை தின்று
எண்ணெய் காடுகளையெல்லாம் ஆளலாம் .
ஆனால் ஒன்றுமட்டும் இதுவரை
ஓநாய்களுக்கு புரியவேயில்லை
நரிகள் பதுங்குவது
வீழ்வதற்கு அல்ல
பாய்வதற்கு என்று !


Leave a comment