பாகிஸ்தான் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

pakistan-minister-1_copy[1]கொழும்பு: பாகிஸ்தானின் திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் அஹ்சன் இக்பால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை (03) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். கொடிய யுத்தத்தை வெற்றி கொண்டதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் புகழ் சர்வதேச அளவில் ஓங்கியுள்ளதென பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பரவிய டெங்கு நோயைக் கட்டுப்படுத்த  மருத்துவர் குழுவொன்றை அனுப்பிவைத்த இலங்கை அரசாங்கத்துக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் மக்கள் இதன் காரணமாக இலங்கை மீது நல்லெண்ணம் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதர உறவுகளை மேம்படுத்துவது தெடர்பில் இருவரும் கலந்ததுரையாடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

pakistan-minister-1_copy[1]

– GA

Published by

Leave a comment