திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களான கிண்ணியா, குச்சவெளி, மூதூர் மற்றும் பட்டிணமும் சூழலும் கிராம சேவை உத்தியோகத்தர், மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் ‘மனித உரிமை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மனித உரிமை பயிற்ச்சிப் பட்டறை திருகோணமலையில் நடை பெற்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் எகெட் கரித்தாஸ் நிறுவனமும் இணைந்து ஒரு நாள் பயிற்சிப் பட்டறை அலஸ்தோட்ட தீபம் வளவாளர் நிலையத்தில் 19.08.2013ஆம் திகதி இடம் பெற்றது.
இதில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் இணைப்பாளர் திருமதி குளோரி பிரான்சிஸ் வளவாளராக கலந்து சிறப்பித்ததுடன் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





Leave a comment