– பழுளுல்லாஹ் பர்ஹான் (பிரத்தியேக நேர்காணல்)
காத்தான்குடி: நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயகர சூழ்நிலைக்கு விரைவில் தீர்வு தருவேன் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தற்கால சூழ்நிலையில் முஸ்லிம்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பில் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
காலங்காலமாக உள்ள முஸ்லிம்களின் மத உரிமைகள் மீறப்படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
கடந்த காலங்களை விட மிக மோசமான காலகட்டத்தில் இலங்கை நாட்டில் இம்முறை ஹிஜ்ரி 1434ம் ஆண்டு புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
கடந்த காலங்களில் தமிழீழ பாசிசப் புலிகளினால் எமது முஸ்லிம்கள் பல கோணங்களில் பாதிக்கப்பட்டு தற்போது சமாதான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் ஆங்காங்கே முஸ்லிம்கள் காலாங்காலமாக செய்து வந்த நமது மூதாதையர்கள் நமக்குப் பெற்றுத் தந்த அடிப்படை மார்க்க உரிமைகளில் கைவைக்கக் கூடிய இக்கட்டான சூழ்நிலை முஸ்லிம்களாகிய எமக்கு ஏற்பட்டுள்ளது.
இவற்றிலே இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம்களின் அடிப்படை மார்க்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த நல்ல நாளில் முஸ்லிம்களாகிய நாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
அது மாத்திரமில்லாமல் எமக்கு எதிராக யார் செயற்படுகிறார்களோ அவர்கள் எம்மைப் பற்றி நல்ல கருத்துக்களை நினைப்பதற்கும் அவர்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டும் என்றும் எமக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று பட்டு எதிர்நோக்கக் கூடிய மிகப் பெரிய சக்தியை தரவேண்டும் எனவும் அல்லாஹ்விடத்திலே பிரார்த்திக்க வேண்டும்.
இதைவிடுத்து உலமாக்கள்,அரசியல் தலைவர்கள்,முஸ்லிம் தலைமைகள் உள்ளிட்டோரை விமர்சிப்பதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
எந்தளவு இந்தப் பிரச்சினையை விரிவுபடுத்தப்படாமல் விஷ்வரூபம் எடுக்கப்படாலிருப்பதற்காகவும் அதை எவ்வாறு கவனமாக கையாள முடியுமோ அதற்கு இரவு முழுவதுமாக சிந்தித்து செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் இன்று அரசியல் தலைமைகள்,அகில இலங்கை ஜம்மியதுல் உலமா,முஸ்லிம் அமைப்புக்கள் இன்று அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம்.
இந்தப் பிரச்சினைக்கு மூலாதார காரணியாக இருக்கின்ற பொதுபல சேனா இயக்கத்தை இந்த சூழ்நிலையில் மாற்றியமைக்க முடியுமா?அவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்ற இந்த நிலையை விட்டு அவர்களை திசை திருப்ப முடியுமா? ஏன்பது தொடர்பாக கதைத்து வருகின்றோம்.
அன்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இது தொடர்பில் கதைத்துள்ளோம்.
இது தொடர்பில் முஸ்லிம்களின் தலைமைகளாக இருக்கின்ற நாங்கள் முஸ்லிம்களுக்கு பொறுத்தமான தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் நாளை மறுமை நாளையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லி தப்பப் போகிறோம் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.
தோடர்ந்து இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.இதைத் தீர்க்கக் கூடிய ஒரு குழு இரவு பகலாக செயற்பட வேண்டும் என்று கடந்த வாரம் கண்டியில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
அதற்கு அவர் மிக விரைவாக இதற்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ள நிலையில் அதை மாத்திரம் நம்பியிருக்க மாட்டோம்.
இந்த சவால்களுக்கு முகங்கொடுக்க கூடிய சக்திகளை சூழ்நிலைகளை முஸ்லிம் தலைமைகளுக்கு அரசியல் வாதிகளுக்கும்,சமூகப் பிரதிநிதிகளுக்கும் உருவாக்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.
புனித ரமளான் மாதம் முடிந்தவுடன் உடனடியாக கிரான்பாஸ் பள்ளி திறக்கப்பட வேண்டும் என்று ஓரு சாரார்.தொடர்ந்து மூடப்பட வேண்டும் என்று மற்றொரு சாரார்,மஹியங்களை பள்ளிவாசல் திறக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் எதிர்காலத்தில் இப்படியான பிரச்சினைகள் இடம்பெறக் கூடாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளேன்.
எனவே கடந்த முப்பது நாட்களும் நோன்பிருந்து இரவு நேரங்களில் முழு நேரம் அல்லாஹ்வுக்காக தொழுது முழுமையான இறைப் பயிற்சி பெற்றிருக்கின்றோம்.
இன்று இரானுவம்,பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அனைவரும் எடுக்கின்ற பயிற்சியை நடைமுறைப்படுத்துகிறார்கள்.
இவ்வாறு நாம் பெற்ற இந்தப் பயிற்சியை எம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.இல்லையேல் நாம் தொழுததற்கும் பிடித்த நோன்பிற்கும் எந்தப் பிரயோசனமும் கிடையாது.
ஆகவே முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த மோசமான சூழ்நிலை நீங்கி முஸ்லிம்களைப் பற்றிய நல்ல எண்ணம் எதிரிகளுடைய உள்ளத்தில் உருவாக்கப்பட வேண்டும்.இந்த நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.தற்போது ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழ்நிலைகள் நீங்கி சமாதானமும் சகவாழ்வுடன் எமது நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இன,மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் அதற்கு இந்த நாளில் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!
Leave a reply to mohamed minnan Cancel reply