விமானங்கள் வராமையால் கட்டனங்களைக் குறைக்கும் ராஜ­பக்ஷ விமான நிலையம்!

mattala (2)மத்­தல: மத்­தல மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு விமான சேவையை விஸ்­த­ரித்து பய­ணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க அரசு நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது. அம்­பாந்­தோட்டை – மத்­தல பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்குச் செல்லும் விமா­னங்­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்­ளது.

இதனை கருத்­திற்­கொண்டு விமா­னங்கள் மற்றும் பய­ணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும் நோக்கில் அர­சாங்கம் மத்­தல விமான நிலை­யத்தின் ஊடாக இலங்கை செல்லும் விமானக் கட்­ட­ணங்­களை குறைத்­துள்­ளது.

இதே­வேளை எமிரேட்ஸ், கல்ஃப் எயார் போன்ற வெளி­நாட்டு விமான சேவை நிறு­வ­னங்­களின் விமா­னங்­களை மத்­தல விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கவும் அங்கு நிறுத்­தி­வைப்­ப­தற்­கான கட்­ட­ணங்­க­ளையும் அர­சாங்கம் 50 சத­வீ­த­மாகக் குறைத்­துள்­ளது.

இதனைத் தவிர, விமா­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிவா­ரண காலமும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மார்ச் மாத தொடக்­கத்தில் வெளி­நாட்டு விமா­னங்­க­ளிடம் அற­வி­டப்­பட்ட கட்­ட­ணங்­களில் 50 வீதம் சலு­கை­ய­ளிக்­கப்­பட்­டது. இதற்­கி­ணங்க, இந்தக் கட்­டண சலு­கையை தொடர்ந்தும் வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­தல மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு வரும் விமா­னங்­களின் எண்­ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த விமான நிலையத்தை, விமானங்களை பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் உத்தேசித்திருந்தமையும் குறிப் பிடத்தக்கது.jpc

Published by

Leave a comment