மறுமையின்
விடியலுக்கு
மார்க்கம் சொன்ன மாதமே
☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾
கறைகளைக் கழுவி
மறையினை
மணக்க செய்த மாதமே
☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾
இனிய இரவுகளையும்
இச்சைகளையும் அழ்ழாஹ் !
உனக்காகவே ஒதுக்கி வைத்தோம்
☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾
நாங்களும்
எங்கள் துணைகளுமாய்
இராமுழுதும் எழுந்தடித்தோடினோம்
எங்கள் றப்பே உனை சுஜூதிப்பதற்காக!
☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾
சக்காத் கடமைக்கு அப்பால் ..
சதா சதக்காவும்
இறைத்து நின்றோம்
வட்டியில் வீழ்ச்சி என்று
வந்த ரமழான் சொன்னதனால் !
☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾
திக்கித்திக்கி
திருத்தம் குறைவாக ஓதினாலும்
ஏற்றங்களும் உண்டு
என்ற உண்மையினை கற்றதனால்
உயர்வான மறையதனை
ஓதியும் முடித்தோம் பல முறை
☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾
அத்தனையும் அழ்ழாஹ்
உனக்கான பணிவுகள்
இந்த உரிமை வரம்புக்குள் நின்று
நாங்கள் ஒரு விண்ணப்பம்!
☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾
பெற்ற தாய் ஒருநாளும்
பிறந்த மகன் மறுநாளுமாய்
பெருநாள் பிழவு வேண்டாம்
ஒற்றுமையாய் உரத்து நாங்கள்
உன்தக்பீர் சொல்ல வேண்டும்
☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾
மாற்றமில்லா முதல்பிறையால்
மகிழ்வோடு நோன்பு நோற்றோம்
இவ்வாறே எத்திசையும் பிறை பேதமில்லா
பெருநாளாய் பிறக்க பிராத்திப்போம்!

Leave a comment