லண்டன்: உலகில் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை இன்று தென்பட்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 8ம் திகதி வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என லண்டன் ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் அறிவித்திருக்கின்றன. கிழக்கு லண்டன் ஜூம்ஆ பள்ளிவாயல், ரெடிங்-அஹ்லுல் ஹதீத் ஜூம்ஆ பள்ளிலாயல் ஆகியவை சற்று முன்னர் வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
பெரும்பாலான இடங்களில் திடல் தொழுகைகளுக்கான ஏற்பாடுகள் வழமைபோலவே இடம்பெறும். பெருநாள் தொழுகை காலை 9 மணியிலிருந்து ஆரம்பமாக இருப்பதாக அவ்வபப்பிரதேச பள்ளிவாயல்கள் தெரிவித்திருக்கின்றன.
![East_London_Mosque_Front_View[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/east_london_mosque_front_view1.jpg?w=150&h=98)
![East_London_Mosque_Front_View[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/east_london_mosque_front_view1.jpg?w=780&h=510)
Leave a comment