ஷவ்வால் தலை பிறையே ஓடி வா !
சந்தோஷ பூ மழை பொழிந்து வா !
தரணியெங்கும் தக்பீர் முழங்கி வா !
☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪
பெருநாள் எனும் பேர் உவகை கொண்டு வா !
யுத்தமில்லா என் நாட்டில் சத்தம் இன்றி நீ வா !
இங்கே இனவாதம் இறந்துபோக
இறையோனிடம் இருகரம் ஏந்தி வா !
ஐவேளை தொழுகின்ற
அரும் பயிற்சி அளித்தவனே நீ வா !
☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪
என் ஆயுள் எல்லாம்
அல்லாஹ்வை நான் வணங்க
தக்வா வெனும் இறையச்சம் என்னுள் தா !
☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪
மூவினமும் முக்கனியாய் தான் வாழ
முழு நிலவின்
முதல் கனியே நீ வா !
☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪
யுத்தம் இல்லா என் நாட்டில்
சத்தமின்றி சமாதானம் நீ தா !
வான் பிறையே நீ வா !
வசந்தங்கள் பல கோடி இங்கே நீ தா !

Leave a comment