காத்தான்குடி: புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடிப் பிரதேசத்தில் பிரதான வீதியில் பூத்துக் குழுங்கும் எழில்மிக்க பேரீத்தம்பழ மரங்களில் வண்ண வண்ண நிறத்தில் சிறிய மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டு பிரதான வீதி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் வழிகாட்டலில் வருடா வருடம் ரமளான் இறுதிப் பகுதியில் குறித்த மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டு பிரதான வீதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டுள்ளதனால் காத்தான்குடி பிரதான வீதி சௌந்தர்யமிக்க நகரமாக காட்சி தருவதடன் அவ்வீதியினூடாக பயணிக்கும் பிரயானிகளையும் கவரச் செய்கின்றது.

Leave a comment