காங்கேயனோடை: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், புனித ரமழானை சிறப்பிக்கும் முகமாக காங்கேயனோடை பிரதேசத்தில் விஷேட இப்தார் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. காங்கேயனோடை மஸ்ஜிதுல் பத்ர் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள், புத்திஜீவிகள், மாணவர்கள், சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுபினர்கள், பிரதேச PMGGயின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேற்படி இப்தார் நிகழ்விற்குத் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி) அவர்கள் தலைமை தாங்கியதுடன் சிறப்புரை ஒன்றையும் ஆற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை PMGGயின் காங்கேயனோடை பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தனர்.





Leave a comment