கொழும்பு: பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்று வெகுவிரைவில் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.கண்டியில் இடம்பெற்ற தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,’பௌத்த விகாரைகள் மற்றும் பிக்குகள் தொடர்பான முறைப்பாடுகள், பிணக்குகள் போன்றவற்றைக் கையாள பொது நீதிமன்றங்களுக்கு செல்லாமல் தீரத்துக் கொள்ள இந்நீதிமன்றங்கள் உதவும்.
அத்துடன் பௌத்த மதகுருக்கள் கௌரவமிழக்காத வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு இத்தகைய நீதிமன்றங்கள் வழி வகுக்கும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார். GA
Leave a comment