கொழும்பு: தமிழ் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் கொழும்பு பிரதி மேயருமான அசாத் சாலி, இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அசாத் சாலி, யானைச் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் அசாத் சாலி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அசாத் சாலி இணைக்கப்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment