உண்பதற்கு உகந்ததற்ற பைற்றர் மீன் அதிகளவிலே வலைகளில் படுவதால் செங்கலடி- ஈரளக்குளம் மீனவர்கள் பெரும் அவதி

dsc_0518_0– பழுலுல்லாஹ் பர்ஹான்

 மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரணைக்குளத்தில்(ஈரளக்குளம்) மீன் பிடியில் ஈடுபட்டுள்ள உள்ளுர் மீனவர்கள் அதிகளவிலான பைற்றர் ரக மீன்களை பிடித்து வருகிறார்கள்.

உண்பதற்கு உகந்ததற்ற மேற்படி பைற்றர் மீனினமானது மிகவும் அதிகளவிலே வலைகளில் படுவதால் தாங்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொள்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

 இது தொடர்பில் ஆராய பிரதேச செயலாளர் உதயசிறிதர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் ஆகியோர் குளத்திற்கு சென்று மீனவர்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் பைற்றர் தொல்லையிலிருந்து மீனவர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்தவதாகவும் அவர் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment