ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புதிய அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு

dsc_0426_0– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புதிய அலுவலகம் நேற்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு யாட் வீதியில் திறந்துவைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலாசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வைபரீதியாக  திறந்துவைத்தார்.

இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்களான கிரிதரன், உதயசிறிதர், தனபாலசுந்தரம், மீள் எழுத்திட்ட நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் குன்றக் குமரன் ,சமுர்த்தி ஆணையாளர் ,மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, ஜனாதிபதி ஆலாகரின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் அலுவலக அதிகாரிகளான ஜோர்ச் பிள்ளை, யோகவேள் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

dsc_0426_0

dsc_0471

dsc_0483

Published by

Leave a comment