ரியாத்: சவூதி அரேபியா அரசு இன்னும் சில வாரங்களில் வட்ஸ் அப் -ஐ தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சவூதி அரேபியா தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணையம் வைபருக்கு இந்த மாதம் தடை விதித்தது.
இந்நிலையில் வட்ஸ் அப்-புக்கும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. வட்ஸ் அப் மூலம் மக்கள் செலவின்றி தகவல்களை பரிமாறிக் கொள்வதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் சவூதி அரசு இன்டர்நெட், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை விதிக்க முயல்கிறது. வைபர், வட்ஸ் அப் மற்றும் ஸ்கைப் உள்நாட்டு விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படி விதிகள் மீறப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சவூதி தொலைத்தொடர்பு ரெகுலேட்டர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யுமாறு வட்ஸ் அப்-புக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. இதையடுத்து வட்ஸ் அப் பதில் அளிக்காவிட்டால் வரும் ஜூலை மாதம் 9ம் திகதிக்குள் அதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இலவச தகவல் பரிமாற்றங்களைத் தடை செய்வதால் அங்கு அதிகமாக பாதிக்கப்படுவது வெளிநாட்டு தொழிலாளர்களே! ஒரு வருட ஒப்பந்தம் தொடக்கம் 3 வருடங்கள் ஒப்பந்தம் வரைக்கும் தொழிழுக்குச் செல்லும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இத்தகைய தடைகளால் அதிகம் பாதிக்கப்படுவர்.

Leave a comment