கொழும்பு: கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (19) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார். இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 1.10 மணியளவில் துமிந்த சில்வா பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது தலையில் காயமடைந்து பாதிக்கப்பட்ட நிலையில் துமிந்த சில்வாவுக்கு கடந்த 18 மாதங்களாக பாராளுமன்ற விசேட விடுமுறை வழங்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டதன் பின்னர் துமிந்த சில்வா இன்று (19) பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சட்டவிரோத கூட்டத்தில் அங்கத்துவம் பெற்றமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
GA
Leave a comment