கொழும்பு: கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிய நேரத்தில் புகையிரதங்கள் வராமையால் பயணிகள் சிலர் கோபமுற்ற நிலையில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டு வருவதாலேயே அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆத்திரமடைந்து கலகத்தில் ஈடுபட்ட பயணிகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி இருந்தனர்.
Leave a comment