கொழும்பு: மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்க ஆபரணங்களையும் இரத்தினக்கற்களையும் பேங்கொக்கிலிருந்து கடத்திவர முயன்ற ஒருவரே இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்விமான நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து பல விமர்சனங்கள் எழுந்தவண்ணமுள்ளன. இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தலவில் இடம்பெற்ற முதலாவது கைது சம்பவம் இதுவாகும்.

Leave a comment