கொழும்பு: நாட்டின் பிரதான நகரங்களில் ஒளிரும் மின் விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர வைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று நுகேகொடை வாராந்த சந்தைக்கு அருகில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். சுற்றாடல் மற்றும் மீள் உற்பத்தி வலுசக்தி அமைச்சு இத்தகவலை தெரிவித்துள்ளது.
தேசிய சுற்றாடல் வாரத்திற்கு அமைவாக இலங்கை நிலையான சக்திவள அதிகார சபையின் ஏற்பாட்டில் சகல நகரங்களிலும் காணப்படும் மின் விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர வைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. GA
Leave a comment