திருகோணமலை: திருகோணமலை இக்பால் நகர் தி/முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றிய திருமதி ஜே.சீ.தில்லைராசன் தனது 36வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெருவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வு பாடசாலை அதிபர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு அதிதியாக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு விஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த ஆசிரியைக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.




Leave a comment