காத்தான்குடி-1, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் புணரமைப்பு

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் 03-08-1990 வெள்ளிக்கிழமை அன்று இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாசிஸ புலிகளினால் கொடூரமாக கொல்லபட்ட சம்பவம் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஒரு மறக்க முடியாத துக்க சம்பவமாக பதிந்துள்ளது.

புலிகளினால் கொடுரமாக தாக்குதல் நடாத்தப்பட்ட தடயங்கள் இதுவரையில் புனரமைக்கப்பட்டாமல் இருக்கின்ற நிலையில் அதை பார்ப்பதற்கு இன்னும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அன்னிய மதத்தவர்களும் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்து அத்தாட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

தற்போது குறித்த காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு வருவது தொடர்பில் எமது செய்தியாளர் அப்பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் சுபைர் ஸி.ஸி.யை தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்கு கருத்து தெரிவித்த பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர், “பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்ட்ட தடயங்கள் ஒரு போதும் புனர் நிர்மானம் செய்யப்படாது. அதைத் தவிர ஏனைய பகுதிகள் மாத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்படும்”  எனவும் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

One response to “காத்தான்குடி-1, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் புணரமைப்பு”

  1. mohmedrislaan Avatar

    After incident in 1990 they make changes in First Time.

Leave a comment