
பழுளுல்லாஹ் பர்ஹான்
கல்முனை: இளம் ஊடகவியலாளர் றிப்தி அலி 05 வார கால விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்கா ஒக்லாமா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நவீன ஊடகங்கள் தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அமெரிக்கா இராஜாங்க திணைக்களம்,கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைப்பிண்ணல் தலைமையகங்களுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண கல்முனை நகரை பிறப்பிடமாக கொண்ட இளம் ஊடகவியலாளர் றிப்தி அலி தமிழ் மிரர் மற்றும் டெய்லி மிரர் இணையத்தளங்களின் ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளருமாவார்.
இவர் இளம்வயதிலேயே ஊடகத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment