காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் இருந்து ஆரம்பிக்கின்ற ஹிஸ்புல்லாஹ் விளைளையாட்டரங்கு வீதியும் அதனோடு இணைந்த பிரதேசமும் முழுமையாக செப்பனிடப்படுவதோடு அங்கு மர நடுகை வர்ணக்கற்கள் பொருத்துதல் போன்ற செயற்பாடுகள் முலம் நவீன மயப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட இருப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்திப்பிரதியமைச்சருமான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் தனது அமைச்சின் ஊடாக இலட்சக்கணக்கான ரூபாய்களை அதற்கென ஒதுக்கீடு செய்துள்ளார். பல்வேறு தரப்பின் ஊடாக இதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக தெரிவித்த பிரதியமைச்சர் இவ் வேலைகள் அனைத்தும் ஜுலை மாதம் முடிவடைவதற்குள் இடம்பெற வேண்டுமென்று சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Leave a comment