வெலிகம: வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் வெலிகம நகரசபையால் நடாத்தப்படும் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரங்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வெலிகம நகர சபை மண்டபத்தில் நகரசபை தலைவர் ஹூஸைன் ஹாஜியார் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத் தலைவர் அஷ்செய்க் எம். ஓ. பத்ஹூர்ஹ்மான் கணணி இயந்திரங்களைக் உரிய பாடசாலை நிர்வாகத்திற்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கநிர்வாக சபை அங்கத்தவர்கள், பாலர் பாடசாலைஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உற்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment