கொழும்பு: தற்போது நாட்டில் பெய்துவரும் மழையினையினையடுத்து பல பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சீரற்ற காலநிலையினையடுத்து நீர்கொழும்பு -கொழும்பு வீதியில் ஜாஎல பகுதியின் பிரதான வீதி நீரில் மூழ்கியதையடுத்து போக்கு வரத்து நெறிசல்கள் ஏற்பட்டன.
நீண்ட துாரம் வாகனங்கள் தரித்து நின்றதால் காலை அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டதை காணமுடிந்தது.
அவ்வாறு நீரில் மூழ்கிய பிரதேசங்களை இங்கு படங்களில் காணலாம்.

Leave a comment