
டீன் பைரூஸ்
காத்தான்குடி: ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சை மாணவர்களுக்கு விதிசா பதிப்பகமும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியமும் இணைந்து புலமைப் பரீட்சைக்கு தோற்றுவது சம்பந்தமாகவும் வினாத்தாள்களுக்கு விடையளிப்பது சம்பந்தமாக கொழும்பிலிருந்து வருகை தந்த விதிசா நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். கேசவன் ஆசிரியர் அவர்களும், என். என். சதீஸ்வரன் (B.A./M.A) அவர்களாளும் விளக்கமளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சென்ற வருடம் புலமைப் பரீட்சை எழுதிய 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் எம். ஐ. எம். ஹாரிஸ் (JP) அவர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
குறிப்பு: சென்ற வருடம் புலமைப் பரீட்சை எழுதி 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் இருந்தால் தங்களுடைய பெயர்களை சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தில் பதிவு செய்து பெருமதியான சான்றிதல்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Leave a comment