சீனாவில் பூகம்பம்: 56 பேர் பலி!

_67125099_67125092[1]– MJ

சிசியான்: சீனாவின் சிசியான் நகரில் இன்று இடம்பெற்ற 6.6 அளவிலான நில நடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்திருக்கின்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருப்பதாக சிசியான் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நில அதிர்வும் அதன் பின்னரான உடனடி மீட்புக்களும் சி.சி.ரி.வி (CCTV) யில் பதிவாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இராணுவ வீரர்களும் விசேட மீட்புப் படையினரும் தொடர்ந்தும் காயப்பட்டவர்களை மீட்பதில் போராடி வருகின்றனர்.

_67125099_67125092[1]

Published by

Leave a comment