பஸ்ஸின் ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் குருநாகல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது

judgementஅளவ்வ: 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி குருநாகல் மாவட்டம் அளவ்வவில் யான்கல்மோதர என்னும் இடத்தில் உள்ள ரயில் கடவையில் பஸ் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் 41 பயணிகள் கொல்லப்பட்டார்கள்.

அந்த விபத்து குறித்த வழக்கிலேயே அந்த பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது குருநாகல் உயர்நீதிமன்றம் குற்றங்கண்டிருக்கிறது.

நீண்ட நாட்களாக தொடர்ந்த இந்த வழக்கில் இருவருக்கும் மரண தண்டனையும், அதற்கு மேலதிகமாக 270 வருடங்கள் சிறைத்தண்டனையும் தலா ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

BBC Tamil

Published by

Leave a comment