ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேஷியாவில் இன்று காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 7.2 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளதாகவும், சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.கிழக்கு இந்தோனேசியாவில் இரியன் ஐயா பகுதியில் 75 கி.மீ., ஆழத்தில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இதே போல் பப்புவா நியூ கினியா தீவிலும் நிலநடுக்கம் 4.7 உணரப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.
இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் கடல்பகுதியில் 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இந்தியப் பெருங்கடல் கடல்பகுதியில் அமைந்துள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 2,30,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
Leave a comment