
சென்ற ( 25.01.2013 வெள்ளிக்கிழமை) புதிய காத்தான்குடி 6 ஜாமிஉத் தெளஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி நௌபலீன் (ஸலாமி) இன் ஜூம்ஆ தொடா்பாக காத்தான்குடி மஜ்லிஸூல் பலாஹிய்யீன் தனது கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
மௌலவி நௌபலீன் (ஸலாமி) என்பவா் தப்லீக் ஜமாத்தினரை மிக மோசமாக ஏசியதாகவும், காத்தான்குடி மக்களின் மனங்களில் என்றும் உயா்வுடன் பேசப்படுகின்ற சங்கைக்குரிய மௌலானா மெளலவி சைகுல்பலாஹ் எம்.ஏ.அப்துல்லா(றஹ்மானி) அவா்களையும் மிம்பரில் வைத்து ஏசியதாகவும் அறிய முடிகின்றது.
உலமாக்கள் என்பவா்கள் நபி (ஸல்) அவா்களில் வாரிசுகள். எனவே அப்படியானவா்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தான் சார்ந்திருக்கின்ற கொள்கையை மற்றவா்கள் ஏற்கவில்லை என்பதற்காக மிம்பர்களைப் பயன்படுத்தி அநாகரீகமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதே பலரின் கருத்தாகும்.
அறிவித்தலை பெரிதாக்கிப் பார்க்க கடிதத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Leave a comment