காத்தான்குடி கடற்கரை வீதியின் சீ.பீ.காசிம் வீதியின் அருகில் உள்ள RIYAS PHONE SHOP 02.12.2012 ஞாயிறு நள்ளிரவு இனம் தெரியாதோரால் உடைத்து கொள்ளையிடப்பட்டள்ளது. மேற்படி கொள்ளைச் சம்பவம் நன்கு திட்டமிட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொள்ளையிடப்பட்டதில் 10 கையடக்க தொலைபேசிகளும், 3 டிஜிட்டல் கமராக்களும் மேலும் சில உபகரணங்களும் அடங்குவதாக முதல் கட்ட விசாரானையயின் போது தெரிய வருகின்றது.
அதே நேரம், இன்னுமொரு கொள்ளைச் சம்பவம் காத்தான்குடி ராசா ஆலிம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று இடம் பொற்றுள்ளது.
விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டப் பட்டுள்ளனா்.

Leave a comment