பள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்கப்படவில்லை

முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் ஊடாக குற்ற விசாரணை திணைக்களத்தினர் முஸ்லிம் பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்து வருவதாகக் கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் எவரும் முஸ்லிம் பள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்கவில்லை என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Published by

Leave a comment