தற்கொலைக் குண்டுதாரி ஆஸாத்

காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்ட 34 வயதுடைய தற்கொலைக் குண்டுதாரி ஆஸாத், அம்பாறை மாவட்டம் – கல்முனை, இஸ்லாமாபாத் பகுதியில் 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்திருந்தார். அவரின் மனைவியின் பெயர் பைறூஸா.

ஆஸாத் தற்கொலைத் தாக்குதலில் பலியான பின்னர், அவரின் மனைவி, சஹ்ரான் குழுவினரோடு இணைந்து சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தார். அதன்போது, அவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அதனால் அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து இறந்து போயினர்.

இந்த குண்டுவெடிப்பில் சஹ்ரானின் தாய், தந்தை மற்றும் சகோதரன் உள்ளிட்ட 15 பேர் மாண்டனர்.

Published by

Leave a comment