மதுபாணத்தை மறுத்த பாகிஸ்தான் அணி

  • MJ

pakistan 1லண்டன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியாவை வரலாற்று ரீதியில் தோற்கடித்து, பாகிஸ்தான் சம்பியனாக முடிசூடிக்கொண்டது. மேற்கத்தேய மற்றும், உயர்தர விளையாட்டுக்களின் சுற்றுப்போட்டிகளின் (சம்பியன்) வெற்றிபெற்றவர்களுக்கு, உயர் தர மிக்க சம்பைன் மதுபானம் வழங்கப்படும். அதனை குளுக்கி, அதன் நுரைகளை சக வீரர்களுக்குத் தெளித்து, வெற்றிக்கிண்ணத்துடன் சம்பைனையும் சுவைப்பது, வெற்றி வீரர்களின் பண்பாடாக இருந்துவரும் நிலையில்,

கடந்த ஞாயிறு இடம்பெற்ற வெற்றிக்கிண்ண கையளிப்பு நிகழ்வில், தங்களுக்கு சம்பைன் மது வழங்கக்கூடாது என பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி. ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, வெற்றிக்களிப்பு, மதுவின்றி எளிமையாகவே பாகிஸ்தான் வீரர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

pakistan 1

Published by

Leave a comment