இலங்கைப் பணிப் பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின் கிடைத்த ரூ.49 இலட்சம்

housemaidறியாத்: சவூதி அரேபியாவிற்கு தொழில் புரிய சென்ற இலங்கைப் பணிப் பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின், மீளவும் சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு சம்பளத் தொகையாக 49 லட்சத்து 36ஆயிரம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2000ஆம் ஆண்டு குறித்த இலங்கைப் பணிப் பெண் போலி ஆவணங்களை சமர்பித்து சவூதி அரேபியா சென்று, 15 வருடங்களாக சம்பளமின்றி பணிபுரிந்துள்ளார்.

housemaid

இது வரையில், வெளிநாட்டிற்குச் சென்றுள்ள தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளாத சம்பளத் தொகையையே குறித்த பெண் பெற்றுக் கொண்டுள்ளார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பெண் 14 வயதில் போலி ஆவணங்களை காட்டி,சவூதி சென்றுள்ளார். இருப்பினும்,15 வருடங்களாக அங்கு தொழில் புரிந்த குறித்த பெண்ணுக்கு சம்பளேமே வழங்கப்படவில்லை. இதனையடுத்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் திலையீட்டில் குறித்த பெண்ணுக்கு அவரது சம்பளத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.

 

Published by

Leave a comment