நோன்பு காலம்

ifthar batticaloa (2)யாரோ முகவரியில்லாத ஒருவரால் வரையப்பட்டு, முகநூலில் உலாவரும் நோன்பு பற்றிய ‘சொற்றொடரை’ எமது காத்தான்குடி மக்கள் அதிகமாக பகிர்ந்துவரும் இந்நிலையில், இப்படித்தான் எமது மக்களின் சிலரது நோன்பு “எண்ணம்” இருக்கப்போகிறது என்பதை உணர்த்தும் வரிகள் இவை….

நோன்பு காலம்

ஹோட்டலுக்கு முன்னால திரையப் போட்டுட்டு
சாப்பிடுங்கோ, சிகரட் பத்துங்கோ

கடற்கரையில ராவைல போய்
பியர் குடிங்கோ, கஞ்சா அடிங்கோ….

மௌலத்து ஓதுங்கோ, கந்தூரி கொடுங்கோ….

வட்டிக்குக் கொடுங்கோ..அந்நிய பெண்ணோடு வாய்விட்டு பேசிங்கோ….

கிரிக்கட் பாருங்கோ, ஃபேஸ் புக்கில சண்டையும் பிடிங்கோ….

இருபத்தேழுக்கு சோறு கொடுங்கோ, கஞ்சி கொடுங்கோ..

ifthar batticaloa (2)

இன நல்லுணர்வு என்ற பெயரில் “காமத்துரு”க்கு இப்தார் கொடுங்கோ, ஊர் ஏழையை துறத்தி அனுப்புங்கோ

பெருநாளைக்கு திடலுக்குப் போங்கோ, 40 பள்ளியில தொழுங்கோ…

ஆனா….

சர்வதேசப் பிறையை மட்டும் கையிலெடுத்திடாதீங்கோ…!!!

  • சமீம் இஃப்திகார்

Published by

Leave a comment