சவுதி பொது மன்னிப்பு அவகாசம்: ஒரு மில்லியன் சட்டவிரோத தொழிலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவார்களா?

labourerறியாத்: சவுதி அரேபியாவில் தற்போது அமலில் உள்ள பொதுமன்னிப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்தது ஒரு மில்லியன் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று  எதிர்பார்ப்பதாக சவுதி அரசு கூறுகிறது.  சவுதி அரேபியாவுக்கு, மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும், ஆப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களிலிருந்தும் குடியேறிகள் வருகிறார்கள்.

அவர்களில் பலர் சட்டவிரோதமாக அங்கு வேலை செய்கிறார்கள். ஆனால், கடந்த மாதம் சவுதி அரசு, 90 நாள் பொதுமன்னிப்புத் திட்டம் ஒன்றை அறிவித்தது, அதன்படி, தமது சட்டவிரோத குடியேறி அந்தஸ்து குறித்த விவரங்களை வெளியிட முன்வரும் எவருக்கும் அபராதம் விதிக்கப்படாது அல்லது மற்றெந்த வழிகளிலும் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் .

labourer

அவர்கள் தங்களது வேலை நிலையை ஒழுங்குபடுத்திக்கொள்ளவோ அல்லது  சவுதி அரேபியாவை விட்டு வெளியேறவோ வாய்ப்பு தரப்படுவார்கள்.

Published by

Leave a comment