காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் இன்றும் ஆரம்பம்

  • எம்.ரீ. ஹைதர் அலி

dengueகாத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாயும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று 2017.03.21ஆந்திகதி-செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபைக்ககட்டடத்தில் நடைபெற்றது. இவ்டெங்கு ஒழிப்பு பணியில் முப்படையினரும் ஈடுபட வேண்டுமென்ற தீர்மானம் ஒன்றும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாகாண சபையின் தவிசாளர், மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர், முதலமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர்கள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

dengue

அதற்கமைவாக 2017.03.22ஆந்திகதி-புதன்கிழமை (இன்று) டெங்கு உருவாகக் கூடிய இடங்களை கண்டறிந்து சிரமதானங்களை மேற்கொள்ளும் முகமாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், இராணுவ வீரர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபையின் ஊழியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

shibly nasrudeen

Published by

Leave a comment