றியாத்: இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தில் ஈரான் யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.கடந்த வருடம், ஈரான் யாத்ரிகர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், தங்கள் நாட்டு பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு செல்வதை ஈரான் அதிகாரிகள் தடுத்தனர்.
2015 ஆம் ஆண்டு ஹஜ் புனித தலத்தில் நடைபெற்ற விபத்தில் பலர் பலியாகினர்; அதில் நூற்றுக்கணக்கான ஈரானியர்களும் அடங்குவர்.
சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் ராஜிய உறவுகள் நல்ல நிலையில் இல்லை. மேலும் மத்திய கிழக்கில் நடக்கும் மோதல்களில் அவை இரண்டும் வெவ்வேறு தரப்புகளை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
றியாத்: இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தில் ஈரான் யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.கடந்த வருடம், ஈரான் யாத்ரிகர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், தங்கள் நாட்டு பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு செல்வதை ஈரான் அதிகாரிகள் தடுத்தனர்.
Leave a comment