விக்டோரியா: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்று (28) தீக்கிரையாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்டுவதோடு, தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விக்டோரியா இஸ்லாமிய மத்திய நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. நாம் அன்புள்ளத்துடன் குறித்த பள்ளிவாசலை மீண்டும் கட்டுவோம் என விக்டோரியா இஸ்லாமிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் முஸ்லிம்கள் அவசர முடிவுக்கு வரவேண்டாம் என தீயணைப்பு உயரதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a comment