காத்தான்குடி: கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட மெளலவி ஆசிரியர் பரீட்சையில் தோற்றி இதுவரை நியமனம் கிடைக்கப்பெறாத மெளலவி ஆசிரியர்கள் தமது நியமனம் கிடைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வகையில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் மெளலவி.எம்.அனஸ் ஜே.பி தலைமையிலான, கிழக்கு மாகாணம் தழுவிய சந்திப்பு 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி தஜ்வீதுல் குர்ஆன் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றது.
இச்சந்திப்போது ‘மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான கிழக்கு மாகாண அமைப்பு’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதில் கிழக்கு மாகாணதின் மூன்று மாவட்டங்கள் தழுவிய பதவி வழி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர். மெளலவி.ஏ.சீ.எச்.எம்.பெளசுல் அமீன்(மட்டக்களப்பு),
செயலாலர்.மெளலவி.ஏ.எஸ்.எம்.நளீம் (அம்பாறை), பொருலாளர்.எம்.றஸூல் ஹாபிஸ் (திருகோணமலை), அத்துடன் மூன்று பெண் மெளலவிய்யாக்கள் பெண்கள் சார்பாக நிருவாகத்தில் இணைக்கப்பட்டனர்.
– மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)


Leave a comment