கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேச விரோத செயல்களை செய்து ஆட்சியை பிடிப்பதற்காக சதித்திட்டங்களை தீட்டி வருவதாக மக்கள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச அடுத்த வருடம் ஆட்சியை பிடிக்கப்போவதாக கருத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 5 வருடங்களுக்கு அசைக்க முடியாத ஆட்சியை அவர் சதி மூலமாக கவிழ்க்க திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.
அதன்படி அரசியல் ராஜதந்திரம் அற்ற ஓர் செயல் உச்ச கட்ட சூழ்ச்சியை முறையை கையாளப்போகின்றாரா..? என்பது தொடர்பில் அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மேலும் தினேஷ் குணவர்தன இராணுவ புரட்சி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்சவும் எவ்வகையிலாவது அதிகாரத்தை கைப்பற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இவை நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அரசு மக்களுடன் இணைந்து மக்களுக்கான மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற செயற்படாவிட்டால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அதே போன்று மஹிந்த சீனாவுடன் கொண்டுள்ள தொடர்பினாலும், அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் காரணமாகவும் நாடு மீள் எழ முடியாத இக்கட்டினை அடைந்துள்ளது.
Published by

Leave a comment