கடந்த 16-11-2016 அன்று உம்றாவை நிறைவேற்றச் சென்ற, காங்கெயனோடையைச் சேர்ந்த ஹயாத்து முகம்மது ஆதம் லெப்பை(73) என்பவர் தனது காலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக கடும் சுகயீனமுற்று தற்போது மதீனாவில் உள்ள மன்னர் பஹத் வைத்தியசாலையின் மேற்பார்வையில், குபா பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ள அத்-தார் தனியார் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றார்.
அல்லாஹுதஆலா அன்னாருக்கு நீண்ட ஆயுளையும், பூரண ஆரோக்கியத்தையும் வழங்குவானாக! ஆமீன்.
அனைவரும் அன்னாரின் ஆரோக்கியத்திற்கும், ஆபியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திக்குமாறு அன்னாரின் குடும்பத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.
தகவல்: மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) காத்தான்குடி

Leave a comment